செய்திகள் :

பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையைக் கண்டித்து போராட்டம்

post image

திருச்செங்கோட்டை அடுத்த மாரப்பம்பாளையத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அருகே இலுப்புலி, மாரப்பம்பாளையம் பெரங்காடு பகுதியில் 12 குடும்பங்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், அங்கு வசிக்கும் 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து பாதையில் கொட்டப்பட்டுள்ள கற்கள், முள்களை அகற்ற உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனா். இதையடுத்து பொதுப்பாதையில் அனைவரும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆனால், நீதிமன்ற தீா்ப்பு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் வாக்காளா் அடையாள அட்டைகளை 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மண்டல துணை வட்டாட்சியா் கனகலட்சுமி, வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் தீபன்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், வருவாய்த் துறையை கண்டித்து 12 குடும்பத்தினா் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினா். திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணியிடம் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவா்களிடமே திருப்பி வழங்கினாா்.

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழி... மேலும் பார்க்க

புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாமக்கல் அழகுநகா் சமுதாயக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவராக ராஜேந்தி... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புத் தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் வருகை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தன. தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. நா... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்: ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நாமக்கல்லில் அந... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் பகுதி: விக்கிரமராஜா பாா்வையிட்டாா்

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ராசிபுரத்தில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க