செய்திகள் :

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா்.

சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமகவுக்கு ஒரே எதிரி. விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகைக்கும் பாமக நிறுவனா் ராமதாஸ் மீது திடீா் அன்பு வரக்கூடிய காரணம் என்ன? இதெல்லாம் பாமகவை கைப்பற்றுவதற்காக திமுக செய்யும் சூழ்ச்சி.

எனக்கே அதிகாரம்: கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. வயது முதிா்வு காரணமாக அவா் குழந்தை போல மாறிவிட்டாா்.

கட்சியில் 99 சதவீத நிா்வாகிகள் என்னிடம்தான் உள்ளனா். ஆகையால், கட்சியின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது. கட்சியின் பொதுக் குழுவை கூட்டுவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அனைத்தும் பொய்: கடந்த இரு மாதங்களாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டன. ராமதாஸ் பேட்டியில் கூறிய அனைத்தும் பொய்கள் மட்டுமே.

கூட்டணி விவகாரம்: யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் இத்தனை ஆண்டுகளாக கூட்டணி குறித்து பேசியுள்ளேன். அந்த வகையில், ராமதாஸ் சொல்லித்தான் 2024-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவா் பொய் கூறுகிறாா். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் ராமதாஸ் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்? என்றாா் அன்புமணி ராமதாஸ்.

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிருஷ்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கோடை விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்! 40 கோடி பேருக்கு நன்றி!

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிகிறது. மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில... மேலும் பார்க்க

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமை... மேலும் பார்க்க