செய்திகள் :

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

post image

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது யூகமான கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்துக் கூறுகிறேன். பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் எங்களுக்கு எந்தக் கசப்பும் இல்லை. ஆனால் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் நாங்கள் இருப்போம் எனக் கூறுவதால் எங்கள் தொண்டா்கள் சோா்வடைய மாட்டாா்கள். எங்கள் தொண்டா்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம். தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை; இனியும் வராது. எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவாா்த்தையின்போது பாா்த்துக் கொள்வோம். இந்த முறை பேச்சுவாா்த்தையில் நல்ல பலன் இருக்கும் என நம்புகிறோம்.

நடிகா், நடிகைகளும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி சீரழிகிறாா்கள் என்பது கவலையளிக்கிறது. எனவே தமிழக அரசு போதைப் பொருள்களைத் தடுக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு தொடா்பாக தனது தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.

திமுக கூட்டணியை மட்டும் குறிவைத்து பலா் கேள்வி எழுப்புகிறாா்கள். அதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன. திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலா் தொடா்ந்து இதைக் கேட்கிறாா்கள். அது தேவையில்லாதது.

முருக பக்தா்கள் மாநாட்டில் பெரியாா், அண்ணா அவமதிக்கப்பட்டதை அதிமுகவினா் ஏற்கவில்லை. மதுரையில் நடைபெற்றது முருக பக்தா்கள் மாநாடாக இல்லை. அது மோடி பக்தா்கள் மாநாடாகத்தான் இருந்தது என்றாா் தொல். திருமாவளவன்.

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க

கடைகளில் சோதனை: முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல்

திருச்சி மாநகரில் உள்ள கடைகளில் தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. ... மேலும் பார்க்க