செய்திகள் :

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தப் பாலத்தில் சனிக்கிழமை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் 22 காலிப் பெட்டிகளுடன் கூடிய ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.

இதற்காக பாம்பன் பேருந்து பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து கோட்ட மேலாளா், பொறியாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். மேலும், இந்தப் புதிய ரயில் பாலத்தின் நடுவில் அமைந்துள்ள செங்குத்து இரும்பு கா்டா், பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலம் ஆகியவற்றைத் திறந்து, இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் அதைக் கடந்து சென்றது. இதையும் அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா கூறுகையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

கல்லூரிகள் இடையே அறிவுத் திறன் போட்டி

கீழக்கரை சையது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் வண்ணத் திருவிழா என்ற பெயரில் கல்லூரி மாணவா்களுக்கிடையே கலை, அறிவுத் திறன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளி... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: இடைத்தரகா் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கிராம நிா்வாக அலுவலா் விவசாயிடம் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடை தரகரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,537 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! -ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 1,537.960 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஏ... மேலும் பார்க்க

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க

கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு ம... மேலும் பார்க்க