செய்திகள் :

பாம்புகள் ஏன் தங்களைத் தாங்களே உண்ணுகின்றன? - பின்னால் இருக்கும் ஆச்சர்ய காரணங்கள் இவைதான்!

post image

பாம்புகளின் உடல் அமைப்பு விசித்திரமான பண்புகளை கொண்டுள்ளது. பாம்புகள் ஏன் தோலை உரிக்கின்றன, பாம்புகள் ஏன் தன்னைத்தானே சாப்பிடுகின்றன என்பது குறித்த விளக்கங்கள் உள்ளன.

உடலின் உட்புறத்தில் வெப்பத்தை உற்பத்தி செய்யும் பாலூட்டிகளை போலில்லாமல் பாம்புகள் வெளிப்புறத்தில் தங்களை சுற்றி இருக்கும் வெப்பத்தை உறிஞ்சுகின்றன.

பாம்புகள் காற்றில் உள்ள ரசாயனங்களை அறிய தங்களது நாக்குகளையும் ஜேக்கப்சனின் உறுப்புகளையும் ( துணை வாசனை உறுப்பு ஆகும்) பயன்படுத்துகின்றன.

snake

விலங்கியல் நிபுணர் ஹெர்பெட்டாலஜிஸ்ட் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் மன அழுத்தம் அல்லது நோயால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு பாம்புகள் தங்களை தாங்களே உண்ண முயல்கின்றன.

ஒரு பாம்பு தன்னை தானே விழுங்க முயற்சிப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதிகமாக வெப்பமடைதல் தான். அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும் பாம்புகள் போதுமான அளவு அல்லது பராமரிக்கப்படாத இடங்கள் காரணமாக இது பெரும்பாலும் நிகழ்கிறது.

பாம்பு மிகவும் சூடாகி, வெப்பத்திலிருந்து விலகிச் செல்ல முடியாத போது அதற்கு ஒரு குழப்பம் ஏற்படும். அதன் பின்னர் அதன் மூளை அதன் சொந்த உடலையே உணவாக அடையாளம் காணும். இதன் விளைவாக பாம்புகள் இவ்வாறு தங்களை தாங்களே தாக்க தொடங்குகின்றன.

காடுகளில் பாம்புகளால் இடம்பெயரவும், சுதந்திரமான வெளிப்பாட்டை நிர்வகிக்கவும் முடிகிறது. ஆனால் ஒரு இடத்தில் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும் பாம்புகள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றின் இடமும் சிறியதாக இருக்கின்றன. இதனால் நாள்பட்ட மன அழுத்தத்தில் பாம்புகள் சிக்கிக்கொள்கின்றன.

பாம்பு பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கிறது என்பதை அறிய அவைகளின் நடத்தைகள் அசாதாரணமாக இருக்கும். ஒரே இடத்தில் நகராமல் இருப்பது, சாப்பிடாமல் இருப்பது போன்ற அசாதாரண நடத்தைகளில் ஈடுபடும் பாம்புகள் மன அழுத்தத்தில் உள்ளன என்று கூறப்படுகிறது. இது போன்ற கடுமையான சந்தர்ப்பங்களில் இருக்கும் பாம்புகள் தங்களது சொந்த வாலையே கடிக்க நேரிடுகிறது.

சில பாம்புகளுக்கு நரம்பியல் பிரச்னை இருக்கலாம் அவ்வாறு இருந்தாலும் இது போன்ற அசாதாரண நடத்தைகளில் பாம்புகள் ஈடுபடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நரம்பியல் கோளாறு அல்லது மூளையில் ஏதேனும் காயம் இருந்தால் நரம்பு மண்டலம் சேதமடைந்து, அதன் நடத்தை மற்றும் உள்ளுணர்வில் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் பாம்புகளின் அறிகுறிகள் கணிக்க முடியாதவையாக மாறுகின்றன. தனது சொந்த உடல் பாகங்களை கூட அடையாளம் காண முடியாமல் போகின்றன.

இது போன்ற நரம்பியல் பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை என்றும், அவை பிறவிலேயே அல்லது நோய் தொற்று காரணமாக ஏற்படுகின்றன. பாம்பு கீழே விழுந்தாலோ அல்லது தாக்கப்பட்டாலோ அதனால் ஏற்படும் அதிர்ச்சி இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதாக விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்; குழப்பத்தில் பூச்சிகளும் வண்டுகளும்..! காரணம் சொல்லும் நிபுணர்!

இங்கே பூக்கள் இல்லாத பாதைகளே கிடையாது. சென்னை போன்ற மெட்ரோ பாலிட்டன் சிட்டியின் பேருந்து நிறுத்தங்களில்கூட, மண் மூடிய ஏதோவொரு சிறு செடியும் அதில் பெயர் தெரியாத ஒரு சிறு பூவும் இருக்கும். அந்தப் பூ மஞ்... மேலும் பார்க்க

நெல்லை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை; ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்!

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

Dravido gecko:‌ குன்னூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பல்லி இனம்! - வன உயிரின ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

இயற்கை அளித்திருக்கும் பெருங்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், நீர் வாழ்வுகள், இரு வாழ்வுகள் , ஓரிட வாழ்வுகள், ஊர்வன போன்றவற்றின் தாய் மடிய... மேலும் பார்க்க

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்ட... மேலும் பார்க்க

நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகள... மேலும் பார்க்க