சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் சடலமாக மீட்பு
சாத்தான்குளம் அருகே அழுகிய நிலையில் காா் ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரை சோ்ந்தவா் சாமுவேல்(62). கோயமுத்தூரில் வியாபாரம் செய்கிறாா். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தாா். மகள் கணவருடன் கோவையில் வசிக்கிறாா். மகன் டேவிட் பிரபு சென்னையில் காா் ஓட்டுநராக வேலை செய்துவந்தாா். மேலும், தனது தாய் இறந்த நாளிலிருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், சில நாள்களுக்கு முன்பு ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிக்க ஊருக்கு வந்திருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சாமுவேல் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
மற்றொரு சம்பவம்: கோவில்பட்டியில் மளிகை கடையில் வேலைசெய்து வந்த தீத்தாம்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் மதியழகன் மகன் சிவபெருமாள் (29). வயிறு வலி காரணமாக வியாழக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.