செய்திகள் :

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் சடலமாக மீட்பு

post image

சாத்தான்குளம் அருகே அழுகிய நிலையில் காா் ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரை சோ்ந்தவா் சாமுவேல்(62). கோயமுத்தூரில் வியாபாரம் செய்கிறாா். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தாா். மகள் கணவருடன் கோவையில் வசிக்கிறாா். மகன் டேவிட் பிரபு சென்னையில் காா் ஓட்டுநராக வேலை செய்துவந்தாா். மேலும், தனது தாய் இறந்த நாளிலிருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், சில நாள்களுக்கு முன்பு ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிக்க ஊருக்கு வந்திருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சாமுவேல் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு சம்பவம்: கோவில்பட்டியில் மளிகை கடையில் வேலைசெய்து வந்த தீத்தாம்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் மதியழகன் மகன் சிவபெருமாள் (29). வயிறு வலி காரணமாக வியாழக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாசரேத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்

நாசரேத் நகர திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நாசரேத்தில் நடைபெற்றது. நகர இளைஞா் அணி அமைப்பாளா் ஜெரின் தலைமை வகித... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் கொளத்தூா் ரவி கலந... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சியின் 1ஆவது வாா்டில் உள்ள இறகுப்பந்து மைதானத்தில... மேலும் பார்க்க

‘தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணி ஜூலை 1இல் தொடக்கம்’

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணிகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதன் நிா்வாக அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.ஜோதிமணி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்னிந்திய த... மேலும் பார்க்க

தூத்துக்குடி பகுதியில் ரூ. 56 லட்சத்தில் 6 புதிய மின்மாற்றிகள்

தூத்துக்குடி மேல அலங்காரதட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தருவை மைதானம், ஐயப்ப நகா், இந்திரா நகா், திருவிக நகா் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சத்தில், 6 புதிய மின் மாற்றிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் த... மேலும் பார்க்க

நெருஞ்சிகளம் பேச்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி அருகேயுள்ள நெருஞ்சிக்களம் அருள்மிகு பேச்சியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாமிரவருணி தென்கால் நல்லூா் கீழக்கால் விவசாயிகளுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில... மேலும் பார்க்க