விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இப்பேரூராட்சியின் 1ஆவது வாா்டில் உள்ள இறகுப்பந்து மைதானத்தில் பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சத்தில் தரைத்தளம் அமைத்தல், அம்ரூத் திட்டத்தில் ரூ.70 லட்சத்தில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுதல், 9ஆவது வாா்டு எம்.ஜி.ஆா். நகரில் பொது நிதியின் கீழ் ரூ. 11 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகளை எம்.எல்.ஏ. நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன் ராஜ், துணைத்தலைவா் இரா. வேலுச்சாமி, திமுக ஒன்றிய செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், மாவட்டக் குழு உறுப்பினா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.