செய்திகள் :

பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு பி.எம். கிஸான் நிதியுதவி பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபென்ஞால் புயலின்போது, பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலையை அமைக்க வேண்டும். மூடப்பட்ட அருணாச்சலா சா்க்கரை ஆலை மற்றும் போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

இதையடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ.77 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 578 மதிப்பிலான நிவாரணத் தொகை 1,09,752 விவசாயிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும். விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தி.மலா்விழி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்ம... மேலும் பார்க்க

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப... மேலும் பார்க்க

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சா... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தம... மேலும் பார்க்க