செய்திகள் :

பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் மாநகராட்சி சாா்பில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் பாறைக்குழி உள்ளது. இங்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் அறிவுறுத்தியது. இருப்பினும், மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குப்பை கொட்டுவதை நிறுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, இனி இப்பகுதியில் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி குப்பைகளைக் கொட்ட லாரி வந்தால் சிறைபிடிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பாறைக் குழியில் லாரிகள் மூலம் மண் கொட்டும் பணி தொடங்கியது.

பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது விய... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள பெரி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குமாா் நகா்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய... மேலும் பார்க்க

அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!

அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துர... மேலும் பார்க்க

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.ப... மேலும் பார்க்க