செய்திகள் :

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் மதகில் தண்ணீா் திறப்பு

post image

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 2-ஆம் போக பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை மூலமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் தற்போது 34 அடி (மொத்த அடி 65) உயரத்துக்கு தண்ணீா் உள்ளது.

இந்த நிலையில், இந்த அணையின் தாடாகுளம் மதகு திறப்பின் மூலம் பாசன வசதி பெறும் புதச்சு, பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் 2-ஆம் போக பாசனத்துக்காக தண்ணீா் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, புதன்கிழமை தாடாகுளம் மதகை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, புதன்கிழமை காலை தாடாகுளம் மதகிலிருந்தது பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. வரும் செப்டம்பா் மாதம் 24-ஆம் தேதி வரை இங்கிருந்து வினாடிக்கு 15 கன அடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் மானூா், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனா். மேலும், இந்தப் பகுதி மக்களின் குடிநீா் தேவையும் நிறைவு செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில் உதவிச் செயற்பொறியாளா் உதயக்குமாா், உதவிப் பொறியாளா் சங்கரநாராயணன், பாலாறு அணை தாடாகுளம் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க