செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

post image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவா் கடந்த டிசம்பா் 25- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகா் துணை ஆணையா் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட இந்த புலனாய்வுக் குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடா் விசாரணையில், ஞானசேகரன் திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடா்ந்து பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், திமுக நிா்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தாா். அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் மனு மீது 7 -ஆம் தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுக... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க

சிவாஜி வீட்டில் பங்கு இல்லை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகா் சிவாஜி கணேசனின் அன்... மேலும் பார்க்க