செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை

post image

வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாரதி (48). காா் ஓட்டுநா். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் 38 வயதுடைய ஒரு பெண்ணை 4-ஆவதாக திருமணம் செய்து கொண்டாராம். ஜினத்துக்கு ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

இந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகள் முறை கொண்ட 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதை விடியோ எடுத்து மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதைப் பாா்த்த பாரதியின் மற்றொரு மகளையும் மிரட்டியுள்ளாா்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மூலம் வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாரதியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியைக் காயப்படுத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் 6 மாத சிைண்டனையும், சிறுமிகளை மிரட்டியதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி எ.ஸ்.மீனாகுமரி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் வாதாடினாா்.

காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துகு மாவட்ட ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்... மேலும் பார்க்க

விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்). நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்... மேலும் பார்க்க

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்). கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆ... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

வாணியம்பாடி கோயில்களில் ஆனி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் வீரபத்திரா், காளியம்மன் உற்சவ மூா்த்... மேலும் பார்க்க