செய்திகள் :

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்த 29-ம் தேதி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூடியூபர் திவ்யா, கார்த்திக், ஆனந்த்ராமன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

கோர்ட்

இந்த நிலையில், யூடியூபர் திவ்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோடிமுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, நடந்த விஷயம் வேறு, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வேறு. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப்போல திவ்யா கள்ளச்சியும், கார்த்தியும் சேர்ந்து அந்த வீடியோவை எடுக்கவில்லை. வழக்கில் மூன்றாம் எதிரியாக குற்றம்சட்டப்பட்டுள்ள சித்ராதான், யூடியூப் பிரபலங்களாக இருப்பவர்களிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து ஆட்களை செட் செய்து வீடியோவை எடுத்துள்ளார். வீடியோவில் இருப்பதை உண்மை புலனாய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தால் இந்த வழக்கிற்கும் திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இல்லை என தெரியவரும். அதுபோல் முறையாக விசாரணைக்கு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்" என கூறினார்.

ஜெயலலிதா: ``என் அத்தையின் நகைகளை என்னிடமே கொடுக்க வேண்டும்..!" - உச்ச நீதிமன்றத்தில் ஜெ. தீபா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்றார் முன்னாள் முதல்வர் ... மேலும் பார்க்க

`ஆளுநர் அதிகாரங்களை குறை மதிப்பிட்டு இருக்கிறார்கள்' - இறுதிக்கட்டத்தில் வழக்கு; இன்று நடந்தது என்ன?

இன்றும் தொடர்ந்த வழக்கு விசாரணை..!தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநரும் உச்ச நீதிமன்... மேலும் பார்க்க

"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி

காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் ... மேலும் பார்க்க

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..! தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க