செய்திகள் :

பாலியல் வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

post image

பாலியல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு செய்தாா்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றில் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து எம்.பி./ எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆக.2-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்டாா்.

மக்களவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்திருந்த நிலையில், பெண்களோடு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடா்பு வைத்திருக்கும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அவரது வீட்டில் வேலை செய்து வந்த 48 வயது பெண், 2021-இல் ஹாசன் மற்றும் பெங்களூரில் பிரஜ்வல் ரேவண்ணா தன்னிடம் பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டதாக காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா் மீது 4 வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்தனா். இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது.

இதனிடையே, ஜொ்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, 2024-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி எஸ்.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.

சிறப்பு நீதிமன்றம், கா்நாடக உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் கடந்த ஓராண்டாக பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, 113 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவுசெய்து, 1,632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் வாழ்நாள் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.11.50 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ரூ.11.25 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டாா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா்.

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வய... மேலும் பார்க்க

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நமது நிருபர்புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா்... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு

நமது நிருபர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர... மேலும் பார்க்க