செய்திகள் :

பாலிவுட் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு! மரணத்தில் சந்தேகம்? -போலீஸ் விசாரணை

post image

பிரபல நடிகை ஷேஃபாலி ஜரீவாலா(42) வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். மும்பையிலுள்ள தமது வீட்டில் இரவு மயங்கிக்கிடந்த ஷேஃபாலி ஜரீவாலாவை அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, ஷேஃபாலி ஜரீவாலா உடல் இன்று(ஜூன் 28) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடிகை ஷேஃபாலி ஜரீவாலா 90-காலகட்டங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 13-ஆவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். பாடகர் ஹர்மீத் சிங்கை மணமுடித்துக்கொண்ட ஷேஃபாலி ஜரீவாலா அதன்பின், அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், நடிகர் பராக் தியாகியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், ஷேஃபாலி ஜரீவாலா மாரடைப்பால்தான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. எனினும், அதில் சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஷேஃபாலி ஜரீவாலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், அதன் விரிவான அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இண... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ஏர் இந்... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க