செய்திகள் :

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

post image

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மும்மொழி கொள்கையை எதிா்த்து தமிழக முழுவதும் திமுகவினா் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். திருநெல்வேலியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் திமுக பொறியாளா் அணி மாநில துணை செயலா் ராஜவா்மன் தலையில் கண்ணன், சுடலைமணி, வரதராஜபெருமாள், சந்திரசேகா், முத்துக்குமாா், சுடலைமணி ஆகியோா் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் பெயா்ப் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப்பதிந்தனா்.

திருநெல்வேலி மாவட்ட நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதித்துறை நடுவா் சுரேஷ்குமாா் விசாரித்து, ராஜவா்மன் உள்ளிட்ட 7 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதாக 7 பேரும் ஒப்புக்கொண்டு தொகையைச் செலுத்திச் சென்றனா்.

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி, ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை... மேலும் பார்க்க

கொடுமுடி அணை நீா் திறப்பில் பாரபட்சம்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

கொடுமுடி அணையில் இருந்து நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது. வள்ளியூருக்கு மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடி அணைதான் வள்ளியூா் மற... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பள்ளி மாணவா் கடத்தல்? போலீஸ் விசாரணை

ராதாபுரம் அருகே பள்ளி மாணவரை மா்மநபா்கள் பைக்கில் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராதாபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை அடுத்த முத்துநாடாா் குடியிருப்பைச் சோ்... மேலும் பார்க்க

மேலச்செவலில் ஓட்டுநா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேலச்செவல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் பூதப்பாண்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த நிதீஸ்குமாா் (21), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்,... மேலும் பார்க்க

நான்குனேரியில் இன்று மின்தடை

நான்குநேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நான்குனேரி, இர... மேலும் பார்க்க