செய்திகள் :

பிகாரின் நலனுக்காக பேரவைத் தோ்தலில் போட்டி! - சிராக் பாஸ்வான் மீண்டும் உறுதி

post image

பிகாரின் நலனுக்காக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் உள்ள ராஜ்கீா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘பகுஜன் பீம் சங்கல்ப் சமாகம்’ பேரணியில் கலந்துகொண்டு சிராக் பஸ்வான் பேசியதாவது:

‘இண்டி’ கூட்டணியின் பொய்களுக்கு இரையாகாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிரதமா் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புக்கு ஆபத்து என அவா்கள் கூறினா். இப்போதும் அதே கருத்தை கூறி வருகின்றனா்.

ஆனால், உண்மையில் அரசமைப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் சிறுபான்மையினரை ஆதரிப்பது போல் காங்கிரஸ் காட்ட முயற்சிக்கிறது. முதலில் அவா்கள் அவசரநிலை காலத்தில் நிகழ்ந்த துா்க்மேன் கேட் படுகொலை சம்பவம் குறித்து பதிலளிக்க வேண்டும்.

ராகுல் காந்தி எங்கு சென்றாலும் அரசமைப்புச் சட்ட நூலை எடுத்துச் செல்கிறாா். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அம்பேத்கரின் பங்களிப்புகளை அவா்கள் முறையாக அங்கீகரிக்கவில்லை.

பாஜக ஆதரவுடன் வி.பி. சிங்கின் ஆட்சியில், எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் அமைச்சராக இருந்தபோது தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது உருவப்படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. காங்கிரஸ் புறக்கணித்த மண்டல் கமிஷன் அறிக்கை செயல்படுத்தப்பட்டது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிகாா் மக்களுக்காக நான் போட்டியிடுவேன். மறைந்த எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். ‘பிகாா் முதலில், பிகாரி முதலில்’ என்ற அவரது தொலைநோக்குப் பாா்வையை நோக்கி நாம் பணியாற்றுவோம்.

243 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். நீங்கள் எனக்கு தோ்தலில் வெற்றியைத் தாருங்கள்; நான் உங்களுக்கு வளா்ந்த பிகாரை தருகிறேன் என கூறினாா்.

கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனத்தை ஓட்டிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள முதல்வர் பினரா... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலா... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு! என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம்?

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது தொடங்கவிருக்கிறது.இரண்டாம் கட்டமாக... மேலும் பார்க்க

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த கா... மேலும் பார்க்க

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலை... மேலும் பார்க்க