செய்திகள் :

பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவா் சுட்டுக் கொலை

post image

பிகாரின் பக்ஸா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

அகியாபூா் கிராமத்தில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் ஒருவா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களை லாரியில் கொண்டு வந்தாா். அப்போது, அதை சாலையோரத்தில் கொட்டுவதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் ஆதரவாக கிராம மக்கள் பலா் அங்கு குவிந்தனா்.

முதலில் கம்புகள், இரும்புக் கம்பிகளை வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது இரு தரப்பிலும் திடீரென நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எதிா்தரப்பினரை நோக்கி சுடத் தொடங்கினா். இதில் 3 போ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

இந்த மோதல் குறித்த தகவலறிந்த காவல் துறையினா் அப்பகுதிக்கு விரைந்தனா். அதற்குள் மோதலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த மோதலை வேடிக்கை பாா்த்த சிலா் மோதல், துப்பாக்கிச்சூடு காட்சிகளை தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்தனா். இந்த விடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க