செய்திகள் :

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

post image

பிகாரில் ரூ. 36,000 கோடியிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல திட்டங்களை இன்று(செப். 15) தொடக்கியும் வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பிகாரில் விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், பிகார் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பூர்ணியா மாவட்டத்தில் சுமார் ரூ. 36,000 கோடியிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், பூர்ணியா விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள புதியதொரு விமான முனையத்தையும் தொடக்கி வைத்தார். அதன்பின், பூர்ணியா - கொல்கத்தா இடையேயான முதல் விமானத்தையும் கொடியசைத்து அவர் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் பிற அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Prime Minister Narendra Modi launched multiple development projects worth around Rs 36,000 crore in Bihar's Purnea district on Monday.

ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், ஈட்டிய வ... மேலும் பார்க்க

முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மா... மேலும் பார்க்க

பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!

மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறை... மேலும் பார்க்க

ஷீஷ் மஹால் வெள்ளை யானையைப் போன்றது.. முதல்வர் ரேகா குப்தா!

ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார். 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி பாதிப்பு: ரூ.25,000 கோடி இழப்பு!

அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. 'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க