செய்திகள் :

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

post image

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட 66 ஆயிரம் பணியிடங்களுக்கான முடிவுகளிலும் குளறுபடிகள் நீடிப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) சார்பில் ஆசிரியர் பணி நியமனத் தேர்வு 3.0 தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 22ஆம் தேதி வெளியானது. தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என பல்வேறு பிரிவுகளில் இத்தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியானது.

இந்நிலையில், ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி பிகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களில் ஒருவரான விக்ரம் குமார் பேசியதாவது,

பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத் தேர்வு எழுதியுள்ளோம். தேர்வு நடந்தபோது 87,774 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், 66,000 பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 21,000 காலிப் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை.

66 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு தரவுகளை பார்க்கும்போது அதிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு நடைபெற்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியானது. இதில் 35,000 - 40,000 தேர்வர்களின் முடிவுகள் மட்டுமே தெரியவந்துள்ளது. ஒரு தேர்வரின் பெயர் மூன்று விதமான பட்டியலிலும் உள்ளது. அவர் ஒரு பிரிவில் பணிக்குச் சேர்ந்தால், மற்ற இரு பிரிவுகளிலும் அப்பணி காலிப் பணியாகவே இருக்கும்.

அவ்வாறு காலிப் பணியிடங்களைத் தவிர்க்க துணைத் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 49 நாள்களாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆளும் கட்சியிலிருந்து ஒருவரும் எங்களை இதுவரை வந்து சந்தித்ததில்லை.

தேஜஸ்வி யாதவ் எங்களுக்கு ஆதவு அளித்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் கோரிக்கையை அவையில் அவர் முன்வைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க