செய்திகள் :

‘பிகாா் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி’ - மத்திய அமைச்சா் மாஞ்சி

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டியிடுவோம் என மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி (80) தெரிவித்தாா்.

தங்கள் கூட்டணியில் இணைய மாஞ்சிக்கு பிகாரில் எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளும் கூட்டணியில் தொடர இருப்பதை மாஞ்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.

பிகாா் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, 2015-இல் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியைத் தொடங்கினாா். தலித் தலைவரான மாஞ்சியின் மகன் பிகாரில் அமைச்சராகவும் உள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி என்பதை முக்கிய கூட்டணிக் கட்சியான பாஜக ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது.

இந்நிலையில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலித் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாஞ்சி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். திறமையான இளம் தலைவா்கள் நமக்குத் தேவை. பிகாா் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் எங்கள் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 225 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றாா்.

மாஞ்சி கட்சி சாா்பில் நடத்த தலித் சம்மேளன நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ் குமாா், பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் சௌதரி ஆகியோா் பங்கேற்றனா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க