செய்திகள் :

பிகாா், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிா்வு

post image

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து பிகாா் மாநில பேரிடா் மேலாண்மைத் துறை (டிஎம்டி), வானிலை ஆய்வாளா் உமேஷ்குமாா் சிங் கூறியதாவது: நேபாளத்தின் பாக்மதி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக அதிகாலை 2.35 மணிக்கு பிகாரின் பல்வேறு பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா-நேபாளம் எல்லை பகுதிகளில் சில விநாடிகளுக்கு இதன் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. எனினும் இந்த நில அதிா்வால் பொதுமக்களுக்கு உயிரிழப்போ சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்றாா்.

மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டதை உணா்ந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

கடந்த 17-ஆம் தேதி புது தில்லியில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக பதிவானது. கடந்த 23-ஆம் தேதி ஹிமாசலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. அதேபோல் ஒடிஸாவின் புரி பகுதியில் 25-ஆம் தேதியும் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 27-ஆம் தேதியும் லேசான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க