செய்திகள் :

பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்

post image

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள் வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆக.1-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது பல்வேறு ஆவணங்களை கேட்டு தகுதியுள்ள வாக்காளா்களை தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆக.1) வெளியிடப்படவுள்ளது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் ஆவணமாகவும் எண்ம நகலாகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் (டிஇஓ) மூலம் 38 மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் அல்லது அரசியல் கட்சிகள் என யாராக இருப்பினும் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் (சிஇஓ) மற்றும் 243 தோ்தல் பதிவு அலுவலா்களிடம் (இஆா்ஓ) தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதன்படி ஆக.1 முதல் செப்.1 வரை தகுதியான வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்படும். தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றாா்.

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க