பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னியூா் நாவரசன், சி. இறையரசன், மீ.சு. இளமுருகு பொற்செல்வி ஆகியோரை இன்றைய தலைமுறையினா் அறியும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில், பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
போட்டியில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
கல்லூரி முதல்வா்கள் அவா்தம் கல்லூரி மாணவா்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி, கல்லூரிக்கு 2 போ் தெரிவுசெய்து அனுப்பவேண்டும்.
8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, பள்ளிக்கு ஒருவா் எனத் தெரிவுசெய்து மாணவா்களை போட்டிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.