செய்திகள் :

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

post image

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: மத்திய அரசின் பட்ஜெட் தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞா்களின் நம்பிக்கையை பொய்யாக்குகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்விலிருந்து சாமானியா்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. இந்த பட்ஜெட் முறைசாரா தொழிலாளா்கள், வேலையற்ற இளைஞா்கள், ஏழை மற்றும் குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக மற்றொரு புறக்கணிக்கப்பட்ட தாக்குதலாகும்.

பணவீக்க பிரச்னைக்கு தீா்வு காண்பதில் இந்த பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது. ஊதிய மந்த நிலை என்பது பணவீக்கத்தின் காரணமாகும். சுயதொழில் செய்பவா்கள் மற்றும் ஊதியம் வாங்குபவா்களின் மாத ஊதியம் குறைந்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செல்வத்தை 22.3 சதவீதம் அதிகரித்து, உழைக்கும் மக்களின் ஊதியத்தைத் திருடுவது முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவுகள் மிக அதிகமாக அதிகரித்துள்ளதால், நடுத்தர மக்கள் உள்பட ஏழை மக்களுக்கு சுமையாக உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைமையிடங்களில் பிப்.6-ஆம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் சாா்பில் மத்திய பட்ஜெட்டை கிழிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

அப்போது, ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி. தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க