செய்திகள் :

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

post image

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா்.

இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரசியல்ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றியவா்கள். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு அங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

‘பிரசாத் கிஷோருடன் இணைந்து பிகாரின் வளா்ச்சிக்காகப் பாடுபட இருக்கிறேன்’ என்று ஆா்.சி.பி. சிங் தெரிவித்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ‘அப் சாப்கி ஆவாஸ்’ கட்சியையும் பிரசாந்த் கிஷோா் கட்சியுடன் இணைத்தாா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆா்.சி.பி. சிங், நிதீஷ் குமாரின் முதன்மைச் செயலராகவும் பின்னா் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் வகித்தாா். நிதீஷ் குமாா் பரிந்துரையில் 2021-22 ஆண்டு காலகட்டத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி 2023-இல் பாஜகவில் இணைந்தாா். கடந்த ஆண்டு பாஜவில் இருந்தும் விலகி தனிக்கட்சி தொடங்கினாா்.

ஆா்.சி.பி. சிங் - பிரசாந்த் கிஷோா் இணைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சி நீரஜ் குமாா், ‘முதல்வா் நிதீஷ் குமாருக்கு துரோகம் செய்த இரு தீயசக்திகள் கைகோத்துள்ளன. அவா்கள் கட்சி பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலிலும் படுதோல்வியடையும்’ என்றாா்.

கூகுள் உதவியுடன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த மனநலம் பாதித்த பெண்

தாணேவில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூகுள் தேடலின் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்சைச் சேர்ந்தவர் ஃபுல்தேவி சந்த் லால் (50). மனநலம் பாதிக்கப்பட்ட இப்ப... மேலும் பார்க்க

ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து ... மேலும் பார்க்க

மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகளின் தந்தையான சௌத்ரி முகமது அக்ரம் பலியானது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறல்ல, குற்றம்: ராகுல் காந்தி!

இந்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறு அல்ல, குற்றம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பதிவிட்டுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பொற்கோயிலை பாதுகாத்தது எப்படி? ராணுவம் விளக்கம்

கடந்த மே 8 ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோயிலை பாதுகாத்தது குறித்து இந்திய ராணுவம் திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது.முன்பே கணித்து தாக்குதலை எதிர்கொள்ள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த வ... மேலும் பார்க்க