செய்திகள் :

பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கை

post image

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அவற்றை செயல்படுத்தவும் மத்திய அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் 4-ஆவது கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டையன் பங்கேற்பு: இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, சுப்பராயன், மாணிக்கம் தாகூா், நவாஸ் கனி, தொல். திருமாவளவன் துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், மருத்துவா் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மௌலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலா், துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், அரசு சாரா அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருமாவளவன் பேட்டி: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய திருமாவளவன், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயா்த்த வேண்டும். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக பேசிய துரை வைகோ, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க