செய்திகள் :

பிரதமரின் பிறந்தநாளில் 500 குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும்: தில்லி முதல்வர்!

post image

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக 500 காப்பகங்கள் தில்லி அரசு தொடங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

தில்லி செயலகத்தில் விஸ்வகர்மா பூசை செய்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தற்காகத் தொழிலாளர்களை முதல்வர் பாராட்டினார். தொழிலாளர்களின் கடின உழைப்பு இல்லாமல் எந்த மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை என்றார்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம், ஆரோக்கிய மந்திர் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு தொடங்கியுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு "பால்னா" என்ற பெயரில் 500 குழந்தைகள் காப்பகங்களை தொடங்க உள்ளோம். பெண் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் குழந்தைகள் அங்குக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள்.

தில்லி தொழிலாளர்களுக்குச் சொந்தமானது, அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் கூறினார்.

செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் ஒடிசாவில் 75 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi government will launch 500 creches for children of women working as labourers in the city on the occasion of Prime Minister Narendra Modi's 75th birthday on September 17, Chief Minister Rekha Gupta said on Tuesday.

இதையும் படிக்க: ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

தேர்தலுக்காக அவதூறு பேசி மக்களை திசைதிருப்புகிறார் மோடி: தேஜஸ்வி யாதவ்

ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார். குடியரசுத் துணைத் த... மேலும் பார்க்க