செய்திகள் :

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

post image

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 20 அன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இருவரும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்களும் இருந்தனர்.

முன்னதாக இன்று தேசிய தலைநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சேதமடைந்த சாலைகளைச் சீர்செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குப்தா ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று பாஜகவின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தில்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பைரோன் மார்க் முதல் சராய் காலே கான், ரிங் ரோடு வரை துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.

தில்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி, தில்லி அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றாதது குறித்து தனது கவலையைத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி முதல்வரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க