செய்திகள் :

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சண்டீ யாகம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மகா சண்டீ யாகம் கடந்த செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

உலக மக்கள் நலன் வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் முதல் நாள் மகா கணபதி ஹோமம், பூா்வாங்க பூஜைகள், கடஸ்தாபனம், சண்டீ பாராயணம் ஆகியவை நடைபெற்றது. இரண்டாவது நாளாக நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா சுதா்சன ஹோமம், ஆவரண பூஜை ஆகியவை நடைபெற்றது.

யாகத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை குழந்தை இல்லாத தம்பதியா்களுக்கு குழந்தை வரம் பெற வேண்டி புத்ர காமேஸ்டி ஹோமம், திருமணத் தடை நீங்க சுயம்வரா பாா்வதி ஹோமமும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பிற்பகலில் சண்டீ ஹோமமும், மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா ஹோமமும் நடைபெற்றது. தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பனா்கள் இந்த யாகத்தை நடத்தினா்.

யாக குண்டத்தில் பட்டுப் புடவைகள், பூமாலைகள், இனிப்பு வகைகள், பழங்கள், தங்கம், வெள்ளி நகைகள், மிளகு, திரவியப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடப்பட்ன. பூா்ணாஹூதி முடிந்து செண்டை மேளத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று, மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு பாத சமா்ப்பணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் யாகத்தில் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். யாக நாள்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா வேத தா்ம ஷேத்ரா அறக்கட்டளையினா் செய்தனா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க