செய்திகள் :

பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

post image

சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.

அப்போது பிரபலங்களின் விவாகரத்து தொடர்பாகவும் பேசியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,

"சினிமா பிரபலங்கள் இப்போது அதிகமாக விவாகரத்து பெறுகின்றனர். அதுவும் 20 வருடங்கள் வாழ்ந்தபின்னர் விவாகரத்து பெறுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

நான் இன்றைய தலைமுறையினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும், ஈகோ இருக்கக் கூடாது. நீ பெருசா, நான் பெருசா என்ற ஈகோ இருக்கக் கூடாது. புரிதல் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை. நீ இப்படி இருந்தால் நான் அப்படி இருப்பேன் என்று இருந்தால், எப்படி குடும்பம் நடத்த முடியும்? அதற்கான உதாரணங்கள்தான் இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் பெருமையாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன். கேப்டன்தான் எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன். எனக்கென்று எந்த சுயவிருப்பமும் இல்லை. அவர் விருப்பம்தான் என் விருப்பம். அவர் செயல்தான் என் செயல். அவர் சொல்தான் என் சொல். திருமணமானபோதே என்னை நான் மாற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன். அவருக்கு கோபம் கடுமையாக வரும். நான் பொறுமையாக இருப்பேன்.

அவரே ஒரு பேட்டியில் 'என் மனைவி நிழல் சக்தி இல்லை, நிஜ சக்தி. அவள் என் மனைவி மட்டுமல்ல, என் தாய்' என்று கூறியிருக்கிறார். அந்த பேட்டியைப் பார்த்து இன்று நான் அழுகிறேன். கேப்டன் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார்.

அவருடைய சிறிய வயதிலேயே அவரின் அம்மா இறந்துவிட்டார். தாய் பாசம் அவருக்குத் தெரியாது. திருமணம் ஆனது முதல் அவர் வீட்டில் இருக்கும்போது நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன். அதனால் கணவன் - மனைவிக்குள் புரிதல் இருந்தால் இந்த விவாகரத்து எல்லாம் தூசிமாதிரி. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் அந்த திறமை இருவருக்குமே வந்துவிடும். இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இதனை என்னுடைய அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிக்க | மீண்டும் கரோனா பரவலா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் நிற... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே ந... மேலும் பார்க்க