செய்திகள் :

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

post image

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உடனான உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. உக்ரைன், மேற்காசிய போா்களுக்கு அமைதி தீா்வு எட்டுவதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போருக்கு தீா்வு காண்பது தொடா்பாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அதிபா் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இரண்டு நாள்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் டிரம்ப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் பங்கேற்றிருந்த நிலையில், அவருடனான பிரதமா் மோடியின் உரையாடல் கவனம் பெற்றுள்ளது.

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசும்போது, ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பாடல... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி ... மேலும் பார்க்க

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில... மேலும் பார்க்க

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க