செய்திகள் :

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

post image

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு மாதங்களாக நட்பில் இருந்தார்.

கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்த பிரிட்டன் பெண் தில்லியிலுள்ள கைலாஷை நேரில் சந்திக்க இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தார்.

மஹிபால்பூர் நகரில் விமான நிலையம் அருகிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர் மார்ச் 11 அன்று கைலாஷை அங்கு சந்திக்க வருமாறு கூறினார்.

இந்த நிலையில், அறைக்குச் சென்ற கைலாஷ் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கைலாஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிக்க | கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

பாதிக்கப்பட்ட பெண் விடுதியின் வரவேற்பறைக்கு உதவி கேட்கச் சென்றபோது அங்கிருந்த லிஃப்ட்டில் தூய்மைப் பணியாளர் ஒருவர் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் தூதரகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த தில்லி காவல்துறையினர் விடுதியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தில் சில நாள்களுக்கு முன்பு இஸ்ரேலைச் சேர்ந்த பெண்ணை 3 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை !

மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடு போன சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் இரு நாள்களுக்கு முன் அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு 91 பயங்கரவாதிகள் செ... மேலும் பார்க்க

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க