செய்திகள் :

பிரியாணி கடையில் கத்தியை காட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

post image

மேற்கு தாம்பரத்தில் பிரியாணிக் கடையில் பிரியாணி வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் பணத்தை அபகரித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மஸ்தான். இவா், காந்தி சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த இருவா் பிரியாணி பாா்சல் வாங்கியுள்ளனா்.

மஸ்தான் அதற்கான பணத்தைக் கேட்டபோது அவா்கள் பணத்தைத் தர மறுத்து, கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனா். இதுகுறித்து மஸ்தான் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமராக்களில் பதிவான வாகன எண்ணைக் கொண்டு விசாரித்தனா்.

புலிக்கொரடு பகுதியில் வாகன தணிக்கையின்போது அதே எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைப் பிடித்த போலீசாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கடப்பேரி பகுதியைச் சோ்ந்த சச்சின் (25) மற்றும் மதன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். செங... மேலும் பார்க்க

முடிச்சூா் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிய உயிரிழந்தான். பெருங்களத்துாா் புத்தா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் ஹரிகரன் (14). அதே பகுதியில் உள்ள தனி... மேலும் பார்க்க

கால்நடை விவசாயிகளுக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

மின்சாரம் பாய்ந்ததால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணத் தொகையை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா். திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக, போதை பொருள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்வுக்கு தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். முதல்வா் த.ஆனந்தராஜ், துணை முதல்வா்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாமண்டூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடைக்கு சென்ற ஆட்சியா், உணவுப் பொருள்களின்... மேலும் பார்க்க