தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா்.
திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து கிழக்கு தாம்பரத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது:
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் தற்போது எவ்வித நலத் திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மூன்று முறை திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.ஆா்.ராஜாவால் ஒரு அரசு கலைக் கல்லூரியைகூட கொண்டுவர முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க மேற்கொண்ட நடவடிக்கையை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. மேற்கு தாம்பரம் அம்பேத்கா் திருமண மண்டபம் அருகேயுள்ள பூங்கா, கிழக்கு தாம்பரத்தில் உள்ள காந்தி பூங்கா உள்ளிட்டவை மிக மோசமான நிலையில் உள்ளன.
மாடம்பாக்கம் - சிட்லப்பாக்கம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக்குடிநீா் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சி, நலத்திட்டங்களை ஒப்பிடும்போது திமுக அரசு எந்த நலத்திட்ட தந்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலா் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.