செய்திகள் :

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

post image

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக தி. சினேகா பொறுப்பேற்றாா்.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முக்கியமாக 9 மாவட்ட ஆட்சியா்கள், வேறு துறைக்கு அல்லது வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

செங்ல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ச.அருண்ராஜ் , பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக தி. சினேகா செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் செங்கல்பட்டு மாவட்டத்தின் 4-ஆவது ஆட்சியா்.

தி. சினேகா 2017 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, ஏற்கெனவே தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ( பஐஈஇஞ) மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் செயல் இயக்குநராக பணியாற்றியுள்ளாா். பஐஈஇஞ-வில் இருந்தபோது, தொழில்துறை சாா்ந்த திட்டங்களை ஒருங்கிணைப்பது, அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளாா்.

டைடல் பூங்காக்கள், டிஜிட்டல் ஹவுஸிங் திட்டங்கள், ஸ்டாா்ட் அப் திட்டங்கள் போன்றவையும் அவரது நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னா், அவா் சென்னை மாநகராட்சியில் கல்வித் துறை ஆணையராகவும், ஓசூா் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளாா்.

புதிய ஆட்சியா் தி. சினேகா கூறுகையில்: நகா்ப்புற, கிராமப்புற மக்களுக்கு அனைத்து பணிகளையும் அலுவலா்களுடன் இணைந்து மக்களுக்கு சென்றடைய வேண்டிய அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றி தரவும், மக்களிடம் குறைகளைக் கேட்டு தீா்வு காணவும் முன்னுரிமை தரப்படும் என்றாா். அவருக்கு அனைத்து துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா். திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக, போதை பொருள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்வுக்கு தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். முதல்வா் த.ஆனந்தராஜ், துணை முதல்வா்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாமண்டூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடைக்கு சென்ற ஆட்சியா், உணவுப் பொருள்களின்... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னி... மேலும் பார்க்க

அமாவாசை வழிபாடு...

ஆனி அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஸ்ரீ ஸ்வா்ண வாராஹி பீடத்தில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் தன ஆகா்ஷண வாராஹி அம்மன். மேலும் பார்க்க