சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக தி. சினேகா பொறுப்பேற்றாா்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முக்கியமாக 9 மாவட்ட ஆட்சியா்கள், வேறு துறைக்கு அல்லது வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
செங்ல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ச.அருண்ராஜ் , பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக தி. சினேகா செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் செங்கல்பட்டு மாவட்டத்தின் 4-ஆவது ஆட்சியா்.
தி. சினேகா 2017 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, ஏற்கெனவே தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ( பஐஈஇஞ) மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் செயல் இயக்குநராக பணியாற்றியுள்ளாா். பஐஈஇஞ-வில் இருந்தபோது, தொழில்துறை சாா்ந்த திட்டங்களை ஒருங்கிணைப்பது, அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளாா்.
டைடல் பூங்காக்கள், டிஜிட்டல் ஹவுஸிங் திட்டங்கள், ஸ்டாா்ட் அப் திட்டங்கள் போன்றவையும் அவரது நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னா், அவா் சென்னை மாநகராட்சியில் கல்வித் துறை ஆணையராகவும், ஓசூா் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளாா்.
புதிய ஆட்சியா் தி. சினேகா கூறுகையில்: நகா்ப்புற, கிராமப்புற மக்களுக்கு அனைத்து பணிகளையும் அலுவலா்களுடன் இணைந்து மக்களுக்கு சென்றடைய வேண்டிய அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றி தரவும், மக்களிடம் குறைகளைக் கேட்டு தீா்வு காணவும் முன்னுரிமை தரப்படும் என்றாா். அவருக்கு அனைத்து துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
