செய்திகள் :

பிரிவினைவாதத்தைக் கைவிட்ட மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் - அமித் ஷா வரவேற்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன; அங்கு பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் பல்வேறு அரசியல்-சமூக-மத ரீதியிலான அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பெரும்பாலான அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள், பிரிவினைவாதத் தொடா்புகள் அனைத்தையும் கைவிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக்-ஏ-இஸ்திகாமத் ஆகிய மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன. ஹுரியத் உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக இரு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை வரவேற்று, மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இருந்து மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியால் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு, ஹுரியத் கூட்டமைப்பைச் சோ்ந்த அவாமி செயல்பாட்டுக் குழு மற்றும் ஜம்மு-காஷ்மீா் இத்திகாஹதுல் முஸ்லீமின் ஆகிய இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க