செய்திகள் :

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

post image

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேலும், தெற்கு சீனக் கடலில் இரு நாட்டுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிலிப்பின்ஸ் நாட்டின் தேசிய புலனாய்வுப் பிரிவு, அந்நாட்டின் முக்கிய தளங்களின் அருகில் சட்டவிரோதமாக தகவல்களைச் சேகரித்தாக சந்தேகிக்கப்பட்ட 2 சீன நாட்டினரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், கைது செய்யப்பட்ட சீனர்கள் ரேடியோ சிக்னல்களை இடைமறிக்கும் சாதனத்தை ஓரு காரில் பொருத்தி தங்களது பிலிப்பினோ கூட்டாளிகளுக்கு பணம் கொடுத்து அந்த வாகனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை, அமெரிக்க தூதரகம், அகுயினால்டோ மற்றும் ராணுவ தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய தளங்களின் அருகில் ஓட்ட வைத்ததாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

மேலும், இதன் மூலம் அவ்விடங்களிலிருந்து பல ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டதா என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சீன அரசுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பிலிப்பின்ஸில் உளவு பார்ப்பது சட்டவிரோதமாக தகவல்கள் சேகரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சீனர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகின்றது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தனது காரில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் பிலிப்பின்ஸின் ராணுவத் தளங்களை உளவு பார்த்த பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜனவரி மாத இறுதியில் தெற்கு சீனக் கடலிலுள்ள பிலிப்பின்ஸின் முக்கிய தளமான பாலவான் தீவின் அருகில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கடற்படையின் நடவடிக்கைகளை டிரோன் மூலம் உளவுப் பார்த்த 5 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க