செய்திகள் :

'பில்கேட்ஸூக்குப் பரிசாக தூத்துக்குடி முத்து; திருச்செந்தூர் முருகர் அருள்!' - பிரதமர் மோடி

post image

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.

மோடி
மோடி

பிரதமர் மோடி பேசியதாவது, 'இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நான்கு நாட்கள் அயல்நாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக பகவான் இராமேஷ்வரரின் பூமியில் கால் வைத்திருக்கிறேன்.

பாரதம் மற்றும் இங்கிலாந்துக்கிடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. பாரதத்தின் மீது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. பகவான் இராமேஷ்வரர் மற்றும் திருச்செந்தூர் முருகரின் ஆசியால் தூத்துக்குடியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த செப்டம்பரில் வ.உ.சி துறைமுகத்தில் புதிய சரக்குப் பெட்டி முனையத்தை நாட்டுக்கு சமர்ப்பணம் செய்தேன்.

மோடி
மோடி

4800 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவும் அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இதே மண்ணில்தான் வ.உ.சி போன்ற தொலை நோக்காளர்கள் இருந்திருக்கின்றனர். அடிமைப்பட்டுக் கிடந்த போது கூட கடல் வாணிபத்தைப் பற்றி சிந்தித்தவர் அவர். இந்த மண்ணில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் ஆகியோர் சுதந்திர பாரதத்துக்கான கனவை காணச் செய்தனர்.

மோடி
மோடி

பாரதியும் அருகேதான் பிறந்திருக்கிறார். அவருக்கும் தூத்துக்குடிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறதோ அதே அளவுக்கான தொடர்பு என்னுடைய தொகுதியான வாரணாசியோடும் அவருக்கு இருக்கிறது. கடந்த ஆண்டுதான் தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸூக்கு பரிசாக அளித்தேன். அவருக்கு அந்த முத்துகள் ரொம்பவே பிடித்திருந்தது. இங்கிலாந்துடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உலகளவில் மூன்றாவது பொருளாதார நாடாக பாரதம் மாறும். ஆப்பரேசன் சிந்தூரில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பு பெரிதாக இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம். இது யுபிஐ அரசாங்கம் ஒதுக்கிய நிதியை விட 3 மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கிறோம்.' என்றார்.

`கண்கவர் வண்ண விளக்குகள்' - தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் | Photo Album

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தூத்துக்குடி விமான நிலையம் புதிய முனையம்.! மேலும் பார்க்க

"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை

தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கட்டியெழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) நடைபெற்றது.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

”தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது”- தூத்துக்குடியில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், விமான நிலையத்தில் உள்ள புதிய முனையக் கட்டடத்தின் உள்ளே நடந்து சென்று பார்வையிட... மேலும் பார்க்க

"அரசியல் ஸ்டன்ட்... அல்வா" - `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை விமர்சிக்கும் செல்லூர் ராஜூ

" ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுள்ளார். செல்லூர் ராஜூமதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்ட... மேலும் பார்க்க

"கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியை பகிர்ந்து அளித்தால்தான் ஊழல் நடைபெறாது" - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

"சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சி, திமுக ஆட்சி" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகு... மேலும் பார்க்க

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

* மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு! * Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?* Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட... மேலும் பார்க்க