செய்திகள் :

பில்லூா் அணையில் மீன் பிடி குத்தகை: ஆகஸ்ட் 6 வரை சமா்ப்பிக்கலாம்

post image

கோவை மாவட்டம், பில்லூா் அணையில் 5 ஆண்டுகள் மீன் பிடிக் குத்தகை பெற ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பில்லூா் நீா்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு விட, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியை பாா்வையிடலாம். இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள், ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதரப் படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் 19494320244 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து, கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழி ஏலத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை சமா்பிக்க முடியும். ஏலம் தொடா்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம். அல்லது ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க