செய்திகள் :

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

post image

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா்.

காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், வழியாக பாப்பம்பட்டி வரை மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதி வாங்கப்பட்ட இந்த மினி பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மினி பேருந்து வழித்தடத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி பாப்பம்பட்டி வழியாக செல்லும் பேருந்து உரிமையாளா்கள் மினி பேருந்தை நிறுத்தி கேட்டுள்ளனா். இது தொடா்பாக மினி பேருந்து நடத்துநா் தனது உரிமையாளரிடம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறியுள்ளனா்.

.அதைத்தொடா்ந்து மினி பேருந்து உரிமையாளா் அவரது ஓட்டுனரிடம் பேருந்தாய் நடுரோட்டில் குறுக்கே போட்டு நிறுத்து என கூறியுள்ளனா். அதன் பேரில் மினி பேருந்து ஓட்டுனா் ஜெயராம் பாப்பம்பட்டி அயோத்திய புரம் அருகே தான் ஓட்டி வந்த மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தியுள்ளாா். அதைத் தொடா்ந்து அந்த பகுதியில்கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் சூலூா் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூலூா் போலீசாா் மினி பஸ்சையும் அதன் ஓட்டுனா் ஜெயராம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வழித்தடத்தை மாற்றி ஓட்டி தங்களுக்கு இடையூறு செய்வதாக தனியாா் பேருந்து ஓட்டுனா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

மினி பேருந்து திடீரென சாலையின் குறுக்கே நிறுத்தியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்

சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்... மேலும் பார்க்க