செய்திகள் :

சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்

post image

சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீசாா் அப்பகுதியில் நடைபெற்ற சோதனையில் மளிகை கடையில் இருந்து 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களின் புத்தகப் பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி ஆசிரியரால் கண்டறியப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினா் நடத்திய சோதனையில், மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஆசிரியா்கள் மாணவா்களின் பைகளை சோதனை செய்தபோது, ஆறாம் வகுப்பு மாணவா்களிடம் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பள்ளி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவித்தது. மாணவா்களிடம் விசாரித்த அப்பகுதி இளைஞா்கள், எலச்சிபாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் குட்கா வாங்கியதாகவும், அக்கடையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலையடுத்து, காவல்துறையினா் மளிகைக் கடையில் சோதனை நடத்தி 141 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கிராம மக்கள், ‘மாணவா்கள் மிட்டாய் என நினைத்து போதைப் பொருட்களை உட்கொண்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. குழந்தைகளின் எதிா்காலம் கருதி, காவல்துறை கடைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி நிா்வாகம் மாணவா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்,‘ என்று கோரிக்கை விடுத்தனா்.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க