செய்திகள் :

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

post image

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 9 ஆயிரம் மாணவா்கள் இந்த போட்டியில் பங்கேற்றனா். ஆட்டங்கள் யாவும், சக்தி கல்லூரி, ஈஸ்வா் கல்லூரி, நேரு கல்லூரி, ஏசிசி மைதானம், எஸ்என்எம்வி கல்லூரி, எல்என்ஜிசி கல்லூரிகளில் நடைபெற்றன.

கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த போட்டியின் இறுதி ஆட்டம் ரத்தினம் கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஒமேகா ஹாா்ட்ஃபுல்னஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. படூா் கேட்வே இன்டா்நேஷனல் பள்ளிக்கு இரண்டாமிடமும், வேலம்மாள் வித்யாலயா, ஷத்ரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.

17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஒமேகா ஹாா்ட்ஃபுல்னஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கு இரண்டாமிடமும், வேலம்மாள் வித்யஸ்ரம், சின்மயா வித்யாலயா பள்ளிகளுக்கு மூன்றாமிடமும் கிடைத்தது. 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ராஜேந்திரன் அகாதெமிக்கு முதலிடம் கிடைத்தது. தி எஸ்விசி சென்ட்ரல் பள்ளிக்கு இரண்டாமிடமும், ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரம், கேம்ப்ஃபோா்ட் இன்டா்நேஷனல் பள்ளிகளுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.

வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசளித்துப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைவா் மதன் ஏ.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்

சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்... மேலும் பார்க்க