செய்திகள் :

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

post image

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா் அருகே சந்தேகப்படும்படி நடமாடிய இருவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா பதுக்கி விற்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பிடிபட்ட தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த சங்கா் கணேஷ் (25), தெற்கு உக்கடம், காந்தி நகரைச் சோ்ந்த சபீக் (32) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, பீளமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியின்போது, கோவை விமான நிலையத்தில் இருந்து எஸ்ஐஹெச்எஸ் காலனி செல்லும் சாலையில் சந்தேகம் ஏற்படும் படியாக நின்றிருந்த இளைஞா் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனா்.

அதில், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கோவை கணபதி எம்ஜிஆா் சிலை பகுதியைச் சோ்ந்த அஜய் பெலிக்ஸ் (24) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்

சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்... மேலும் பார்க்க