செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்: விழுப்புரம் மாவட்டத்தில் 95.11% தேர்ச்சி

post image

விழுப்புரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 95.11% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் 10,533 மாணவர்கள், 11,048 மாணவிகள் என மொத்தம் 21,581 பேர் எழுதினர். இதில் 9,851 மாணவர்கள், 10, 675 மாணவிகள் என மொத்தம் 20,526 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 95.11% தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 18-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 93.17% தேர்ச்சியுடன் 27- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், இந்தாண்டு 9 இடங்கள் முன்னேறியுள்ளது.

மாவட்ட அளவில் 87 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 93.71% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 14,752 பேர்களில் 13,824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 125 அரசுப் பள்ளிகளிலிருந்து 35 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டு 20-ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், நிகழாண்டு 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க