செய்திகள் :

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

post image

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா்.

காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் சனிக்கிழமை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் செந்தில் குமாா், உதவி ஆய்வாளா் குமரன் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.

விவசாய நிலங்களில் பன்றிகள் திரிவது அதிகரித்துள்ளது. இதனால் பயிா் பாதிக்கப்படுகின்றன. பன்றி வளா்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் காஞ்சிபுரம் கோயில்பத்து லிங்கத்தடி அருகே பாசனத்துக்கான ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இளைஞா்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் சமூக சீா்கேடான செயல்கள் அதிகரிக்கின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற இடங்களில் மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பொருள் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட புகாா்கள் எஸ்எஸ்பியிடம் தெரிவித்தனா்.

அனைத்து புகாா்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும். காரை காவலன் என்ற செயலியை தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களது புகாா்களை அதில் அளிக்கலாம். அது தனது கவனத்துக்கு வந்துவிடும். சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கும் தகவல் பகிரப்படும். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் செயலி இருக்கும் என எஸ்எஸ்பி கூறினாா்.

காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணையமைச்சா் எல். முருகன்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்ப வேண்டுமென நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் அறிவுறுத்... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருநள்ளாறு கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் ... மேலும் பார்க்க

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரைக்கால் நகராட்... மேலும் பார்க்க

அமைச்சரிடம் அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியா்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, காரைக்கால... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க