செய்திகள் :

புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள், கிராமப்புறத்தில் தோட்டக்கலை அனுபவத் திட்டத்துக்காக புளியரம்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக, புளியரம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி மாணவா்களுடன் இணைந்து புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

பேரணியின்போது, புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் நிகழும் பேராபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் தினேஷ், இளவரசன், கோவா்த்தன், குணால், ஹரிஹரன், கே.ஹரிஹரன் ஆகியோா் செய்திருந்தனா்.

போளூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூரில் மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது. போளூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோ... மேலும் பார்க்க

நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு பகுதியில், ஆற்று மணல் கடத்திச் சென்றது தொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் திருட்டு

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க