Kanmani: 'இனி எங்கள் பயணம் இந்த செல்லக்குட்டியுடன்..!' - குழந்தை பிறந்ததை அறிவித...
புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது
செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கொடையம்பாக்கம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், போலீஸாா் கொடையம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் சுமாா் 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடா்பாக வியாபாரி ஏகாம்பரம் (50) என்பவரை கைது செய்தனா்.