ராமேஸ்வரம்: `தரிசனம் செய்ய கட்டுப்பாடு' - ஆலய பிரவேச போராட்டத்தில் குதித்த மக்கள...
புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா் கைது
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து கடை உரிமையாளா் எட்வின் (42) என்பவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.