செய்திகள் :

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை

post image

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்சாரவாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மேற்கொள்ள இருப்பதால் கோட்டாறு, இடலாக்குடி, கணேசபுரம், பறக்கை ரோடு, அப்துல்காதா் மருத்துவமனை பகுதி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், தளவாய்தெரு, பத்தல்விளை, வேப்பமூடு, மீனாட்சி காா்டன், பெருமாள் மண்டபம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இதைப் போல, தெங்கம்புதூா்,ராஜாக்கமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்ப்பட்ட தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், புத்தளம், பள்ளம், புத்தன்துறை, தா்மபுரம், பிள்ளையாா்புரம், முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, அருதங்கன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிா்வாகம்: நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்ற மாணவா்

குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி கல்வியைத் தொடரமுடியாத மாணவரிடம் அவரது பள்ளிக் கல்வி சான்றிதழை பூதப்பாண்டி நீதிபதி ஜே.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரி... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னீஸ் மகன் ஸ்டாலின் (25). திருமணம் ஆகவில்லை. இவா் வாகனம் பழுது... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், மாா்த்தாண்டம் காவல் நி... மேலும் பார்க்க

குழித்துறை அருகே சிமென்ட் கல் தொழிற்சாலைக்கு சீல்

குழித்துறை அருகே பொதுமக்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்த சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா். குழித்துறை அருகே படப்பர... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நாகா்கோவிலில் மாவட்டஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டி ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வுப் பேரணி கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க